ஒளிப்படைப்புகள்

உண்மையை ஒப்புக் கொண்ட திரு.தொல் .திருமாவளவன்!

இந்திரா காந்தி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் கொண்ட முரண்பாடு காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு போர்ப் பயிற்சி கொடுத்தார் என்ற உண்மையை திரு.தொல் திருமாவளவன் பகிரங்கமாக சொல்லிவிட்டார்.
இதுதான் இந்தியா இலங்கைக்கு செய்த பெரும் துரோகமாகும்.ஒரு இறைமையுள்ள நாட்டுக்கெதிராகவும் ஜே:ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பாடம் படிப்பிக்க வேணடுமென்பதற்காக இந்திரா காந்தி செய்த செயல் மன்னிக்க முடியாத குற்றமே.
அவரின் நோக்கம் இலங்கையைத் தொடர்ந்தும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதேயாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிட்ட இந்தியாவுக்கு போர்ப்பயிற்சி கொடுக்கும் போதேn தெரியவில்லையா அவர்கள் பயங்கரவாதிகள் என்று.
தமிழக அரசியல்வாதிகள் ஈழத்தமிழருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திரு.தொல் .திருமாவளவன் உட்பட,திரு.வே.பிரபாகரன் பெயரைச் சொல்லி ஈழத்தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடித்து அவரின் பெயரில் குளிர்காய்பவர்களே இவர்கள்.
உலகிலேயே மூன்று மணித்தியாலங்கள் சாப்பிடாமலிருந்து அதற்கு உண்ணாவிரதம் என்று பெயர் வைத்து தான் உண்ணாவிரதம் இருந்ததால்தான் போர் ஓய்ந்ந்தது என்று சொல்லி ஈழத்தமிழரின் காதில் பூ வைத்தவர்தானே கலைஞர் திரு.முத்துவேல் கருணாநிதி அவர்கள்.
திரு.நெடுமாறன் வல்கராக பேசியதாக சொல்லும் ஐயா திரு.தொல் .திருமாவளவன் அவர்களே ”அவிழ்த்துப்
போடுகிறவளுக்கு எல்லாம் பதில் சொல்லத் தேவையில்லையென்று என்று காயத்திரி ரகுராமிக்கு சொன்னீரகளே !அது என்ன கலைச் சொல்லா?.
சொன்னீர்களே அது வல்கர் இல்லையா.அது என்ன கலைச் சொல்லா.?
திரு.வே.பிரபாரன் பெயரைச் சொல்லியும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபம் கொள்வதாகச் சொல்லியம் தயவு செய்து நீங்கள் யாருமே நிலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்
இலங்கைத் தமிழர்கள் தமது அரசியலைப் பார்த்துக் கொள்வார்கள்.ஐயா திரு.தொல் .திருமாவளவன் அவர்களே தாங்களும் றோவின் கையாள் என்பது இலஙகைத் தமிழர்களுக்கு வெட்:டவெளிச்சம்..
றோ புலிக் கொடியை ஏந்துங்கள் என்றும் சொல்லும் பிறகு அவர்கள் பயங்கரவாதிகள்அ என்றும் சொல்லும்.
சிங்களவர்கரளை நண்பர்களாகஎ சகோதரர்களா எண்ணாமல் இநஇதியாவையும் தமிழகத்தையும் போற்றிய துதிபாடிய இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிடம் நன்றாகவே பாடம் படித்துவிட்டார்கள்.
ஐயா திரு.தொல் .திருமாவளவன் அவர்களே !நீங்களும் ஒரு துரோகிதானே.எமது பார்வையில் நீங்கள்அனைவருமே இந்திரா காந்தி உட்பட துரோகிகள்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.