5 வயது பெண் குழந்தை கைகால்களை கட்டி வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை!
டில்லியில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்களை கயிற்றில் கட்டி வீட்டின் மேற்கூரையில் கொளுத்தும் வெயிலில் காய வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தலைநகர் டில்லியின் வடகிழக்கு பகுதியான காராவால் நகரின், துக்மிர்பூர் என்ற பகுதியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொளுத்தும் வெயிலில் படுத்திருக்கும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
விசாரணையில், சித்ரவதைக்குள்ளான குழந்தை 1-ம் வகுப்பு மாணவி என்பதும், வீட்டு பாடம் எழுதாததால், இப்படி ஒரு கொடூர தண்டனையை கொடுத்துள்ளது தெரியவந்தது. இது குறித்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
![]()