கதம்பம்

அத்தியாவவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள், விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!

பண்டிகைக் காலத்தின்போது, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக 175 முதல் 200 மில்லியன் டொலர்கள் அவசியம் என்று இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக, சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசியப்பொட்களை தாங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் தேங்கியுள்ளன.

எனினும் அவற்றை விடுவிப்பதற்கு இன்னும் டொலர்கள் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ள தங்களின் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்த அந்நிய செலாவணி கிடைக்க வேண்டும்.

இல்லையெனில், வெளிநாட்டு விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று நிஹால் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *