கவிதைகள்

வரந் தருவாய் முருகா!… ( கவிதை ) கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வரந் தருவாய் முருகா – வாழ்வில்

நிரந் தரமாய் உன்னை

நினைந்துமே நான் வாழ

வரந் தருவாய் முருகா   

 

சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில்

மரமாக இருப்பதையும் ஒழுத்திடுவாய்

உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும்

உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய்   ( வரந்தருவாய் முருகா )

 

குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில்

கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்

திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும்

மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா )

 

மாறுபடு சூரரினை திருத்தியவா – வாழ்வில்

வேறுமுகம் அமையாது காத்திடுவாய்

காரிருளை கருணையினால் களைந்திடுவாய் – என்றும்

கரிசனைய என்மீது காட்டிடுவாய்  ( வரந்தருவாய் முருகா )

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *