நேசம் நாடும் நெஞ்சங்கள்

காரைதீவில் தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு!

இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கலைஞர்களுக்கான நலனோம்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (29) காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் வசிக்கும் தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கான உதவித்தொகையை உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். பார்த்திபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்  ரி.எம்.றிம்சான் மற்றும் காரைதீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
நூருள் ஹுதா உமர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *