பலதும் பத்தும்

ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடனான தனது 21 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

39 வயதான மெஸ்ஸி, திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, வேதனையுடன் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

2022 ஃபிஃபா உலகக் கோப்பை

 

2005-ல் அறிமுகமான மெஸ்ஸி, 207 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்து, அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார்.

ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! | Messi Retires From International Football

 

2022-ல் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று தந்ததே அவரது மிகப்பெரிய சாதனையாகும். மேலும், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டங்களையும் அர்ஜென்டினாவுக்கு அவர் பெற்றுத் தந்துள்ளார்.

கடைசி சர்வதேசப் போட்டி

 

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்த போட்டியே இவரது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.

ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி! | Messi Retires From International Football

நாட்டின் புதிய தலைமுறை வீரர்களின் வருகை மற்றும் இதுவரை சாதித்த பெருமிதத்துடன் ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ள எட்டு முறை பலோன் டி’ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button