மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

பிஷ்கெக் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை மோடி சந்திப்பதற்கும் இதன்போது வாய்ப்புள்ளது.
இருப்பினும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட இருதரப்புச் சந்திப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாகத் திட்டமிடப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இரு தலைவர்களும் தங்கள் சந்திப்பின்போது, இந்தியா-ரஷ்யா இடையிலான பரந்த அளவிலான இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இடையிலான அரசுகளுக்கிடையிலான ஆணையத்தின் (IRIGC) கூட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
பிஷ்கெக்கில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகத் தலைவர்கள் மேற்கொள்ளவுள்ள சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கான தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின்போது கிரெம்ளினில் புட்டினை சந்தித்து, பிரதமர் மோடியின் நல்வாழ்த்துகளை ரஷ்ய ஜனாதிபதியிடம் தெரிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.
26 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடானது ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய திகதிகளில் பிஷ்கெக்கில் நடைபெறுகிறது.
சீனா, ரஷ்யா மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகள் இணைந்து, ஒரு பாதுகாப்பு அமைப்பாக 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கின.
கடந்த கால் நூற்றாண்டில் இதன் அளவும் செல்வாக்கும் அதிகரித்துள்ள போதிலும், இதன் நோக்கங்களும் திட்டங்களும் தெளிவற்றவையாகவே உள்ளன.
மேலும், பொதுமக்களிடையே இதற்கான அறிமுகமும் குறைவாகவே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()