இந்தியா

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (31) மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் திகதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது வரவு செலவு திட்டமும், 6ஆம் திகதி வேளாண் வரவு செலவு திட்டமும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, 7, 10,11 ஆகிய திகதிகளில் வரவு செலவு திட்டம் மீதான விவாதமும், 12ஆம் திகதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.

இந்த நிலையில், 17ஆம் திகதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 32 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (31) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.

முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான முதலமைச்சர் ஜோசப் விஜய், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். விவாதம் தொடங்குவதற்கு முன்னதாக, தங்களது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button