இலங்கை

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கு அரசாங்கம் அனுமதி!

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பான கலந்துரையாடல் பிரதி அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ .சரத் சந்திர தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கூட்டுறவுபிரதி அமைச்சர் ஆர்.எச்.உபாலி சமரசிங்க வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நெடுங்கேணி பிரதேச செயலாளர் வவுனியா பொலிஸ் பொறுப்பாதிகாரி, வனவள பொறுப்பு அதிகாரி, தொல்லியல் பொறுப்பு அதிகாரி , நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி ஆலய நிர்வாகத்திற்கு இடையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் ஆலயத்தில் நாளைய தினம் நடைபெற உள்ள பொங்கல் விழா தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு வனம் தொடர்பான பாதுகாப்பு தொல்லியல் தொடர்பான பாதுகாப்பு கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button