இந்தியா

மாணவர் போராட்டத் தடையுத்தரவை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது!

இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை, கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

தகவல்களின்படி, பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறைகளுக்கு அந்த உத்தரவு ஆகஸ்ட் 14 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டது.

தற்போது திரும்பப் பெறப்பட்ட அந்த உத்தரவின்படி, இடதுசாரி கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) ஆகியவை ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் பாடசாலை, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை டிவிகே (TVK) அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

மாணவர்கள் இது போன்ற எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்காமல் இருப்பதை உறுதிசெய்ய, பாடசாலை மற்றும் உயர்கல்வித் துறைகள், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுமாறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களைக் கல்லூரிக்கல்வி ஆணையர் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாகத் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையை வலியுறுத்தும் வகையில், ஆகஸ்ட் 14-ஆம் திகதியன்று அரசு அனுப்பிய கடிதத்தை அந்த உத்தரவு சுட்டிக்காட்டியது.

அண்மையில் அந்த உத்தரவு CJP-இன் விமர்சனத்திற்கு உள்ளானதுடன், அது அதனை “அரசியலமைப்புக்கு முரணானது” மற்றும் “தர்க்கத்திற்குப் புறம்பானது” என்று குறிப்பிட்டது.

இதையடுத்து அந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினர் எழுப்பிய விமர்சனங்களை அடுத்து புதன்கிழமையன்று மாநில அரசால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button