இந்தியா

14 மாநிலங்களில் சோதனை – பாகிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் கைது

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட “பயங்கரவாதச் செயல்பாட்டாளர்களை” இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 14 இந்திய மாநிலங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ISI) ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஷ

துப்பாக்கிகள், தோட்டாக்கள், பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையின் முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள் மற்றும் கச்சா வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button