ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ; அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?

பிராந்திய கடல் பகுதியில் கப்பல்கள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வகையான உடன்படிக்கையை எட்டுவதற்கு நெருங்கியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றொரு மத்தியஸ்தரான கட்டாரும் அறிவித்துள்ளது.
போருக்கு முன்னர் உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து சென்ற முக்கிய நீரிணையை முடக்கியுள்ள இந்த முட்டுக்கட்டையை ஈரானும் அமெரிக்காவும் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற சில நம்பிக்கைகளை இந்த கருத்துக்கள் வழங்கியுள்ளன.

இரு தரப்பினரின் சமீபத்திய கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஒரு ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் மங்கியது போல் தோன்றின.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த செவ்வியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் , அமைதி ஏற்பாடு அல்லது ஒரு ஒப்பந்தத்திற்கு சாதகமாக விஷயங்கள் மீண்டும் வடிவம் பெற்று வருவதாக கூறினார்.
எனினும் இது தொடர்பில் ஈரான் மற்றும் அமெரிக்க தரப்பில் இருந்து எவ்வித உத்தியோகப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை.
ஹோர்முஸ் நீரிணை நிர்வாகம் குறித்து ஓமானுக்கும், ஈரானுக்கும் இடையிலான தனித்தனி பேச்சுவார்த்தைகள் முன்னேறிய கட்டத்தில் உள்ளதாக கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()