உலகம்

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரானின் தற்போதைய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியைத் தொடர்புகொள்வது தற்போதைய சூழலில் மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா கொமெய்னி புதிய மதத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், அவர் இதுவரை பொதுவெளியில் தோன்றாததுடன், தந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்துவிட்டார் அல்லது படுகாயமடைந்துள்ளார் போன்ற வதந்திகள் பரவிய நிலையில், ஜனாதிபதி பெஜெஸ்கியானுக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாயின.

மேலும், பேச்சுவார்த்தை விவகாரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்க கெடு விதித்துள்ள கொமெய்னி, தனது ஆதரவை ஈரானிய புரட்சிகரப் படையின் கமாண்டர் அகமது வஹிடிக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இச்சூழலில் இந்தச் சந்தேகங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான், ஈரான் அளித்து வரும் பதிலடி நடவடிக்கைகளில் மொஜ்தபா கொமெய்னி முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவரது ஆதரவே தங்களுக்குப் பெரிய பலமாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புச் சூழல் காரணமாக அவரை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக உள்ள நிலையில், சில தீய எண்ணம் கொண்டவர்கள் உயர் தலைவர் குறித்துத் தவறான பிம்பத்தையும் வதந்திகளையும் பரப்ப முயற்சிப்பதாகக் கூறி அத்தகவல்களை அவர் மறுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button