பலதும் பத்தும்

இந்தியாவின் வைர தலைநகரம் எது தெரியுமா?

வைரம் என்பது பூமியின் ஆழத்தில் அதிக அழுத்தத்தால் உருவாகும் மிகக் கடினமான தூய கரிமம் ஆகும்.

இது அதன் ஒளிரும் தன்மை, உறுதி மற்றும் பட்டை தீட்டப்படும் அழகுக்காக அறியப்படுகிறது.

அந்தவகையில், இந்தியாவின் வைர தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி, குஜராத்தில் உள்ள சூரத் நகரம், வைர வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல் தொழிலுக்காக “இந்தியாவின் வைர தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.

உலகளாவிய வைர வர்த்தகத்தில் சூரத் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல், உலகின் பெரும்பாலான வைரங்கள் சூரத்தில் பதப்படுத்தப்படுகின்றன.

உலகின் சுமார் 90 சதவீத பட்டை வைரங்கள் சர்வதேச நகைச் சந்தைகளை அடைவதற்கு முன்பு சூரத் நகருக்கு வருகின்றன.

இங்கு அவை வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சூரத்தின் வைரத் தொழில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

வைர வெட்டுதல் ஆலைகள் முதல் ஏற்றுமதி நிறுவனங்கள் வரை உள்ள தொழில்கள் நகரம் முழுவதும் உள்ள வணிகங்களுக்குப் பயனளிக்கிறது.

சூரத் நகரில் உள்ள திறமையான வைர கைவினைஞர்கள், வைரங்களை மிகுந்த துல்லியத்துடன் வெட்டி மெருகூட்டுகின்றனர்.

 

Surat Diamond Bourse

பலர் இந்தத் தொழிலை தங்கள் குடும்பத்தினரிடமிருந்து தலைமுறை தலைமுறையாக கற்றுக்கொண்டுள்ளனர்.

வைரங்களைத் தவிர, சூரத் நகரம் ஜவுளித் தொழிலுக்கும் மிகவும் பிரபலமானது.

வைர மற்றும் ஜவுளித் தொழில்களின் வளர்ச்சியால், சூரத் குஜராத்தின் முக்கிய வர்த்தக மையமாக உருவெடுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய வைர வர்த்தக அலுவலக வளாகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘சூரத் டைமண்ட் போர்ஸ்’ உள்ளிட்ட நவீன திட்டங்கள் நகரின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவி வருகின்றன.

இதன் மூலம், சர்வதேச வைரத் தொழிலில் சூரத் தொடர்ந்து முன்னணி நகரமாக திகழ்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button