பலதும் பத்தும்

கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம், ஆன்லைன் சூதாட்ட தளங்களை சட்டப்பூர்வ முறைப்படுத்துதலின் கீழ் கொண்டுவந்து, அதன் மூலம் பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜூலை 13 முதல் ஆல்பர்ட்டாவில் தனியார் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதி அளிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன. மக்களின் சூதாட்டப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்துவது கடினம்.

முன்னதாக பெரும்பாலான ஆன்லைன் சூதாட்டங்கள் கட்டுப்பாடின்றி இயங்கி வந்ததாக ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம் | Alberta Aims To Get Gambling Websites

அரசாங்கத்திற்கு எந்தவித வரி வருவாயும் கிடைக்கவில்லை. எனவே, இவற்றை முறைப்படுத்தி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவசியம் எனக் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆல்பர்ட்டா சந்தையில் இயங்க விரும்பும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்வரும் கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தான் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருப்பதாக உணர்ந்து தன்னைத் தடுத்துக் கொள்ளக் கோரினால், அனைத்து ஆன்லைன் மற்றும் நேரடி சூதாட்டத் தளங்களிலும் அவருக்குத் தடை விதிக்கப்படும்.

பயனர்கள் தங்களுக்குத்தானே பண வரம்பு மற்றும் நேர வரம்புகளை நிர்ணயித்துக் கொள்ளும் வசதிகள் அளிக்கப்படும்.

தொழிலும் சார்ந்த விளையாட்டு வீரர்கள் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்கள் மற்றும் சூதாட்டத்தைக் கைவிட முயல்பவர்களைக் குறிவைத்து விளம்பரம் செய்யக் கூடாது.

இதேவேளை, ஆல்பர்ட்டாவில் நடைபெறும் ஆன்லைன் சூதாட்டத்தில் 70% பகுதி சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற வெளிநாட்டு தளங்களிலேயே நடைபெற்று வந்தது.

புதிய சட்டப்பூர்வ சந்தை மூலம் முதல் ஆண்டில் சுமார் 76 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் எனவும், முதல் இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தப் சந்தை மதிப்பு 2.8 பில்லியன் டொலரை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியைக் கொண்டு, சூதாட்டப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விழிப்புணர்வும், மருத்துவ மறுவாழ்வு சிகிச்சைகளும் வழங்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button