பலதும் பத்தும்

அதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா?

பொதுவாக, அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது சிலருக்கு எரிச்சல், அசௌகரியம் அல்லது அமைதியின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, தொடர்ந்து அதிக இரைச்சல் நிறைந்த சூழலில் இருப்பது அல்லது மணி அடிப்பது, இயந்திரங்களின் சத்தம், ஹார்ன் ஒலி, கட்டுமானப் பணிகளின் இரைச்சல் போன்ற ஒரே மாதிரியான ஒலிகளை மீண்டும் மீண்டும் கேட்பது, சிலருக்கு தலைவலி, சோர்வு மற்றும் மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.

அதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா? மருத்துவ விளக்கம் | Headaches And Irritation When Listening To Noise

இத்தகைய நிலை ஒருசிலருக்கு மட்டுமல்ல, பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், ஏன் சிலருக்கு மட்டும் சத்தம் அதிகமாகத் தொந்தரவு செய்கிறது? அதற்கான காரணங்கள் என்ன? இதைத் தவிர்க்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்? என்பதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

முக்கிய காரணங்கள்

அன்றாட வாழ்க்கையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வேலைப்பளு, குடும்பப் பொறுப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், போதுமான ஓய்வு இல்லாமை, தூக்கக் குறைபாடு போன்றவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, மூளை வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு அதிக உணர்திறனுடன் செயல்படும். இதன் காரணமாக, சாதாரணமாகத் தோன்றும் சத்தங்கள்கூட மிகவும் எரிச்சலூட்டுவதாக உணரப்படலாம்.

அதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா? மருத்துவ விளக்கம் | Headaches And Irritation When Listening To Noise

குறிப்பாக, பெண்கள் வீட்டு வேலைகள், அலுவலகப் பொறுப்புகள், குழந்தை பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஒரே நேரத்தில் கவனிப்பதால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, அதிக சத்தம் அல்லது தொடர்ந்து கேட்கும் ஒரே மாதிரியான ஒலிகள் அவர்களுக்கு எரிச்சல், கவனச்சிதறல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.

அதேபோல், தூக்கமின்மை, ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்), பதட்டக் கோளாறுகள், அதிக சோர்வு அல்லது சிலருக்கு இருக்கும் ஒலி உணர்திறன் (sound sensitivity) போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

இதற்கான தீர்வுகள்

இந்தப் பிரச்சினையை குறைப்பதற்கு முதலில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தூங்குதல், சீரான உடற்பயிற்சி செய்தல், தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளுதல், அமைதியான சூழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தல் போன்றவை மன அமைதியை மேம்படுத்த உதவும்.

அதிக இரைச்சல் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்ப்பதும் நல்லது. தேவைப்பட்டால் காதுகளைப் பாதுகாக்கும் இயர்ப்ளக் (Earplugs) அல்லது இரைச்சலைக் குறைக்கும் ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம்.

மேலும், இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்து, அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு இருந்தால், காது, மூக்கு, தொண்டை (ENT) நிபுணர் அல்லது நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.

அதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல் உணர்வு ஏற்படுகின்றதா? மருத்துவ விளக்கம் | Headaches And Irritation When Listening To Noise

அதிக சத்தத்தால் ஏற்படும் எரிச்சல் என்பது சாதாரணமான அனுபவமாக இருந்தாலும், அது அடிக்கடி ஏற்பட்டு வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கத் தொடங்கினால், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button