இலங்கை

செம்மலை நீராவியடி ஆலயத்தில் தடைகளைத் தாண்டி தொடரும் வழிபாடு

வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் இன்றைய தினம் பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வருடாந்த உற்சவத்திற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இப்பணியில் ஆலய வளாகம் சுத்தம் செய்யப்பட்டதுடன், வழிபாட்டிற்கு தேவையான சூழலும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில் அபகரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் மற்றும் தடைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலும், தற்போது ஆலய நிர்வாகத்தினரின் வழிநடத்தலில் ஆலய வழிபாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button