பலதும் பத்தும்

மோடி வெளியிட்ட ’செல்ஃபி வீடியோ’

நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட மூன்று நிமிட வீடியோ செய்தியில் பேசிய பிரதமர் மோடி, வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும்.

அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம். இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது. எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது. வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button