இலங்கை

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் தளர்வாக அமுல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர்,குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது.

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான “பரஸ்பர” வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

அதனை தொடர்ந்து ட்ரம்ப் 150 நாட்களுக்கு 10% தற்காலிக வரியை விதித்திருந்தார். இது இன்றுடன் நிறைவடையும் நிலையில் குறித்த புதிய அமுல்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button