உலகம்

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது முற்றிலும் நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களால் வௌியிடப்பட்டுள்ள ஈரானின் உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி  வௌியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

“அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் திட்டமிட்டு மீறி வருகிறார்.

எனவே, அவரது வார்த்தைகளுக்கோ அல்லது உடன்படிக்கைகளில் உள்ள அவரது கையொப்பத்திற்கோ எந்தவொரு சர்வதேச நாணயமும் இல்லை.”

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக முறிந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் முதல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான பரஸ்பர இராணுவத் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அமெரிக்க இராணுவம் ஈரானின் முக்கிய இராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏழாவது இரவாகவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாகப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இந்த நிலையில், ஈரானின் தற்போதைய இந்த அரசியல் அறிக்கை மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button