உலகம்

போர் உச்சம்; அமெரிக்காவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான் ! பீதியில் உலக நாடுகள்

அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழு அளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்ற புதிய அதிரடிப் போர்க்கட்டத்திற்குள் நுழையும் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்கா குண்டுமழை பொழிந்து வரும் சூழலில், ஈரானின் இந்த பகிரங்க மிரட்டல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் (IRIB TV) தோன்றிப் பேசிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) ,

“மத்திய கிழக்கில் தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கான காலம் தற்பொழுது முற்றிலும் முடிந்துவிட்டது; அமெரிக்கா போரை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் தற்காப்புப் பதிலடிகளைத் தாண்டிப் பாய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய தாக்குதல் உத்தியை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கினால், எந்தவொரு அரசியல் எல்லையையும் நாங்கள் மதிக்க மாட்டோம்; அந்த எல்லைகள் எதுவும் எதிரிகளுக்குப் பாதுகாப்பை வழங்காது” என்று கூறி, அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் சேர்த்துத் தாக்கத் தயங்க மாட்டோம் என ஆக்ரோஷமாக (mohsen rezaee) எச்சரித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி அறிவுறுத்தலின்படி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைப்பதற்காகத் தங்களின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் அலைகளை ஏவப் போவதாக ஈரான் பதிலடிப் பிரகடனம் செய்துள்ளது.

இதுவரை பிராந்தியத்தில் ஒரு பெரிய உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடி வெடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே தங்களின் ஏவுகணைக் கூட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்தி, பொறுமை காத்து வந்ததாகக் கூறியுள்ள ஈரான் ராணுவத் தலைமை, இனி தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து வந்தால் பின்வாங்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்னிலையில் ஈரானின் இந்த “முழு அளவிலான போர்” எச்சரிக்கை ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய உலகப்போர்ச் சூழலின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button