உலகம்

இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 5 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பரப்பி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களும் எவ்வித சேதமுமின்றி இந்திய விமானப்படையின் சேவையில் தொடர்ந்து நீடிக்கின்றன என்றும் இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் அதிரடித் தாக்குதலைத் தொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த ராணுவ மோதல் வெடித்திருந்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே எல்லைப் பகுதியில் கடுமையான மோதல் போக்கு நீடித்தது.

இந்த ராணுவ மோதலின் போது, இந்தியாவின் அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்களைத் தங்களது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் சர்வதேச அளவில் பிரசாரம் செய்தது.

எனினும், இக்கூற்றை இந்தியா ஆரம்பம் முதலே திட்டவட்டமாக மறுத்து வந்தது.

இதன் மூலம், போரின் போது இந்தியாவின் வான் பாதுகாப்புப் பலவீனமடைந்தது போன்று காட்டுவதற்காகப் பாகிஸ்தான் மேற்கொண்ட போலிப் பிரசாரம் முறியடிக்கப்பட்டுள்ளதாக ராணுவப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button