உலகம்

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

அத்துடன், இரு நாடுகளினதும் புத்தாக்க நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘பாரத் இனோவேட்ஸ்’ (Bharat Innovates) நிகழ்வையும் இரு தலைவர்களும் கூட்டாகத் தொடங்கிவைத்துள்ளனர்.

தனது பயணத் திட்டத்தின்படி, ஸ்லோவாக்கியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்து மீண்டும் பிரான்ஸ் திரும்பவுள்ள பிரதமர் மோடி, ஏவியான் (Évian) நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள ஜி-7 மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்த மாநாட்டையொட்டி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பையும் இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button