பலதும் பத்தும்
வெசாக் விழாவால் இலங்கையெங்கும் ஒளிமயம்

முழுமையான ஞானமடைந்த புத்தரின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் மகாபரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் விழாவினை (திரிமங்கல) கொண்டாடும் வகையில், வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்களால் இலங்கை முழுவதும் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளது.
புத்தரின் முப்பெரும் விழாவை நினைவுகூரும் வகையில், கொழும்பு நகரிலும் பல வெசாக் வலயங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தற்போது ஒளியூட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, பல வெசாக் வலயங்கள் மற்றும் தானசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

![]()