மனிதர்களை நிலவிற்கு சுமந்து செல்லும் ரொக்கெட் வெடித்து சிதறியது

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் நிலவின் மேற்பரப்பிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த ரொக்கெட் வெடித்து சிதறியது.இந்த சம்பவத்தால் நாசா அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜன் நிறுவனத்தின் நியூ கிளென் ரொக்கெட் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நேற்று(28) இரவு 9 மணியளவில் வெடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.
செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டவேளை அனர்த்தம்
98 மீட்டர் நீளமுள்ள அந்த ரொக்கெட், அமேசானின் லியோ பிராட்பேண்ட் நெட்வொர்க்கிற்காக 78 செயற்கைக்கோள்களை ஜூன் 4-ம் திகதி விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது.
இதுகுறித்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விபத்தில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். மிகவும் கடினமான நாள், ஆனாலும், சீரமைக்க வேண்டிய அனைத்தையும் சீரமைத்துவிட்டு மீண்டும் விமானப் பயணத்தைத் தொடர்வோம். அது நிச்சயம் பலனளிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
நியூ கிளென் ரொக்கெட்டை ஏவுவதற்காக உலகில் கட்டப்பட்ட ஒரே தளம் எல்சி-36 ஆகும். தற்போது பாதிக்கப்பட்ட இந்த தளத்தை மீண்டும் சீரமைக்கும் வரை, ப்ளூ ஆரிஜன் நிறுவனம் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் சேவைக்கு போட்டியாளராக இருந்துவரும் லியோ நெட்வொர்க்கிற்கு இந்த விபத்து பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
![]()