பலதும் பத்தும்
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவம்; யாழிலிருந்து எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளையதினம் இடம்பெறவுள்ள நிலையில் கொடிச்சீலை இன்றைய தினம் சம்பிரதாய பூர்வமாக எடுத்துவரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக கொடிச் சீலை வழங்குகின்றவர்களினால் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.







![]()