பலதும் பத்தும்

நிலத்தின் கீழே மறைந்து வாழ்ந்த 20,000 மக்கள்!; ஆச்சரியமூட்டும் நிலக்கீழ் நகரம்

துருக்கியில் உள்ள கப்படோசியா குகைகளின் வரலாறு, மில்லியன் கணக்கான ஆண்டுகளின் புவியியல் உருவாக்கத்தையும், அதைத் தொடர்ந்து பல்லாயிரம் ஆண்டுகால மனித தகவமைப்பையும் உள்ளடக்கியது.

கப்படோசியாவில் 1962 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக நபரொருவர் நிலத்தை தோண்டிய போது நிலத்திற்கு கீழே ஒரு சுரங்கம் கிடப்பதனைக் கண்டு துருக்கிய அரசாங்கத்திற்கு அறிவித்தார்.

அந்த சுரங்கத்தை மேலும் தோண்டிய அரசாங்கத்திற்கு பெரியதொரு அதிர்ச்சி.நிலத்திற்கு கீழே பெரியதொரு நகரமே அமைக்கப்பட்டிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றனர்.

அந்த பாரிய நிலக்கீழ் நகரத்தின் அத்தனை அம்சங்களும் ஆச்சரியப்படுத்துவனவாக அமையப்பெற்று இருந்தன.

எப்படியானதொரு அனர்த்தத்தையும் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அந்த நிலக்கீழ் நகரம் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த நிலக்கீழ் நகரத்தில் வாழ்ந்தவர்கள் சுவாசிப்பதற்காக என்று நுற்றுக்கணக்கான துவாரங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

நிலக்கீழ் நகரமானது சுமார் 2000 மக்கள் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டு இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button