பலதும் பத்தும்

வீதி போக்குவரத்து சோதனை சாவடியில் மனித ரோபோக்களை களமிறக்கிய சீனா!!

கூட்டத்தை கட்டுப்படுத்த உதவும் வகையில் சோதனை சாவடிகள் உள்பட முக்கிய இடங்களில் சீனா தனது முதல் ரோபோ காவல் படையை களமிறக்கியுள்ளது.

தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஹாங்சோவில் (Hangzhou) 15 மனித உருவ போக்குவரத்து மேலாண்மை ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறல்களை சுட்டிக்காட்டுதல், போக்குவரத்தை நெறிப்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் போன்ற பணிகளை இந்த ரோபோக்கள் மேற்கொள்கின்றன.

இருப்பினும், இந்த ரோபோக்களின் இருப்பு எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தியது. ஏனெனில், மக்கள் தெருக்களிலும் பாதசாரி கடக்கும் இடங்களிலும் கூடி, இந்தப் புதிய ரோபோக்களுடன் காணொளிகளை பதிவு செய்தனர்.

இந்தத் தொழில்நுட்பம், மனித அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் போக்குவரத்துப் பணிகளில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, மாரத்தான் போன்ற போட்டிகளிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button