ஹோர்முஸ் நீரிணை மோதல்: போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை

ஹோர்முஸ் நீரிணையில் நேற்று ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்தும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பகைமை நடவடிக்கைகளுக்குப் பிறகு போர்நிறுத்தம் முடிவடைந்துவிட்டதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இல்லை, போர்நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக முன்னெடுக்கப்படும் ‘Project Freedom’ மெகாத் திட்டம் ஆகிய இரண்டும் முற்றிலும் வேறுபட்ட செயல்முறைகள் என்று அவர் இங்கு வலியுறுத்தினார்.
“நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொள்வோம் என்றும், அதனை மிகவும் கடுமையாகச் செய்வோம் என்றும் கூறியிருந்தோம். அதனை நாங்கள் அவ்வாறே நிறைவேற்றியுள்ளோம். அது ஈரானுக்கும் தெரியும். இறுதியில், ஒரு குறிப்பிட்ட சம்பவம் போர்நிறுத்தத்தை மீறுவதாக அமைகிறதா என்பது குறித்த முடிவை ஜனாதிபதியே எடுப்பார்,” என்று ஹெக்செத் கூறினார்.
அதேபோல், போர்நிறுத்தத்தின் எல்லைகளைத் தாண்ட வேண்டாம் என்றும், எடுக்கப்படும் நடவடிக்கைகளில் புத்திசாலித்தனமாகச் செயல்படுமாறும் அவர் ஈரானைக் கேட்டுக்கொண்டார். “தற்போதைக்கு போர்நிறுத்தம் நிச்சயமாக அமுலில் உள்ளது, ஆனால் நாங்கள் அது குறித்து மிகவும் தீவிரமான அவதானத்துடன் இருக்கிறோம்,” என்றும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
![]()