உலகம்
உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் ; ட்ரம்பின் கருத்துக்களால் அதிகரிக்கும் அச்சம்

ஹோர்முஸ் நீரிணையில் “புராஜெக்ட் ஃப்ரீடம்” (Project Freedom) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது “உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில் ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அமெரிக்க கடற்படை சொத்துக்கள் மீது ஈரான் நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் பேரழிவுகரமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தொடர்ந்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை மேசையில் ஈரானிய ஆட்சி (தெஹ்ரான்) மிகவும் இணக்கமான கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
![]()