தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதி இளைஞனுக்காக கவலையடைந்த நாமல்!

தமிழ்நாட்டில் அகதியாக வசித்து வரும் 37 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு மேற்கொண்ட போராட்டத்திற்கு மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆதரவு தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் அதாவது தனது X தளத்தில் பதிவொன்றையிட்டு குறித்த இளைஞர் தாயகம் திரும்ப வெளிநாட்டமைச்சர் தலையிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 19 திகதி தனது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்புமாறு 37 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
தான் ஆறுவருடம் புலல் சிறைச்சாலையிலும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
25 வருட வாழ்க்கையின் சோகம்
மேலும் 25 வருடங்கள் அநாதையாக வாழ்வதால் தனது தாய்-தந்தையிடம் செல்ல வேண்டும் என அழுது புலம்பும் காணொளி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
அதை மேற்கோள் காட்டியே நாமல் தனது பதிவை செய்துள்ளார்.அந்த பதவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒரு இளைஞன் தனது எதிர்காலத்திற்காக கெஞ்சுவதைக் காண்பது இதயத்தை உருக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை வம்சாவளி அகதிகளின் நிலைமை இன்னும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.
அடையாளப் பிரச்சினைகளால் மேலும் பல இளைஞர்களின் உயிர்கள் பறிபோவதை எம்மால் அனுமதிக்க முடியாது.
இந்த இளைஞன் பாதுகாப்பாக மீண்டும் தாயகம் திரும்புவதை உறுதி செய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
![]()