இலக்கியச்சோலை

சாகித்யரத்னா, வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன்….. (மரண அறிவித்தல் )

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம் சஞ்சிகை ஸ்தாபகர் , சாகித்யரத்னா, வைத்தியக் கலாநிதி தி. ஞானசேகரன் அவர்கள் தமது 84ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

அன்னார், தியாகராஜ ஐயர் – பாலாம்பிகை தம்பதியின் மூத்த மகனும் கெங்காதரக் குருக்கள் (ஈவினை), சாமிநாதன் சர்மா (திருகோணமலை) மற்றும் காலஞ்சென்ற லலிதாம்பாள் வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னார் கீரிமலை ஞானலக்ஷ்மி (முன்னாள் இந்து சமயப் பாட இணைப்பதிகாரி – கண்டி) அவர்களின் அன்புக் கணவரும் இராஜேஸ்வரன் (அவுஸ்திரேலியா), வசுந்தரா சுவாமிநாதன் (வட்டுக்கோட்டை), பாலச்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (Mahinda Funeral Parlour – 591 Galle Rd, Mount Lavinia)
12-04-2026 (ஞாயிறு) மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரையும்
13-04-2026 (திங்கள்) காலை 9:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரையும்
வைக்கப்பட்டு பின்னர் தெஹிவளை – கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்: ஞானம் பாலச்சந்திரன் (இளைய மகன்)
0717 362 862
0787 362 862
+61 408884263 (whatsapp)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *