பலதும் பத்தும்

தூக்கத்தில் நடப்பது ஒரு நோயா? அதிர வைக்கும் மருத்துவ விளக்கம்!

நாம் உறங்கும்போது நம்மை அறியாமலேயே பேசுவது, நடப்பதும் பல நேரங்களில் வேடிக்கையாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் ஆழமான மருத்துவக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தூக்கத்தில் பேசுவது என்பது ஒரு பொதுவான நிலை.

மூளையில் உள்ள பாதுகாப்பு அமைப்பு கனவு சார்ந்த செயல்பாடுகளைப் பேச்சாக வெளிப்படாமல் தடுக்கத் தவறும் போது இது நிகழ்கிறது.

காரணங்கள்: மன அழுத்தம், காய்ச்சல், மது அருந்துதல் மற்றும் தூக்கமின்மை.

இதற்குத் தனி சிகிச்சை தேவையில்லை.

மன அழுத்தத்தைக் குறைப்பதே சிறந்த தீர்வு.

இது பேசுவதை விட ஆபத்தானது.

அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த பெய்டன் என்ற பெண், தூக்கத்திலேயே காடுகளுக்குள் சென்றது போன்ற சம்பவங்கள் உயிருக்கு ஆபத்தானது.

ஏன் நிகழ்கிறது? தூக்கம் பல நிலைகளைக் கொண்டது. இதில் ஆர்.ஐ.எம் (REM – Rapid Eye Movement) எனப்படும் ஆழ்ந்த தூக்க நிலையின் போது உடல் தளர்வாக இருக்க வேண்டும்.

ஆனால், தூக்கத்திற்கும் விழிப்புநிலைக்கும் இடையே சமநிலையின்மையால் உடல் இயங்கத் தொடங்கிவிடுகிறது.

எப்போது கவலைப்பட வேண்டும்?

தூக்கத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது (உதைப்பது, கத்துவது).

பகல் நேரங்களில் அதிகமாக உறங்கி விழுவது.

அடிக்கடி தூக்கத்தில் எழுந்து நடப்பது. இவை நரம்பியல் சார்ந்த பிரச்னைகளின் அறிகுறியாக இருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

சிறந்த தூக்கத்திற்கான 5 டிப்ஸ்:

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

பிற்பகல் 3 மணிக்கு மேல் காபி, டீ போன்ற கேஃபின் கலந்த பானங்களைத் தவிர்க்கவும்.

உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைல் போன் செயலியை நிறுத்த வேண்டும்.

உறங்கும் முன் மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவர் அறிவுரைப்படி ‘மெலடோனின்’ (Melaton) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்! முறையான தூக்கம் மற்றும் மன அமைதியே இத்தகைய சிக்கல்களிலிருந்து உங்களைக் காக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *