பலதும் பத்தும்

உலகின் மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

உலகின் மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை பாரிய அளவு
அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு கணிசமான அளவு அணுவாயுதங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

ரஷ்யாவும் சீனாவும் அந்த எண்ணிக்கை உயர்வதற்குப் பெரிய பங்காற்றியதாக Nuclear Weapons Ban Monitor எனும் அமைப்பு வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உக்ரேனியப் போரால் அணுவாயுதப் பதற்றம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகின் 9 இடங்களில் 9,575 அணுவாயுதக் கட்டமைப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

அவை பாய்ச்சுவதற்குத் தயார்நிலையில் இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.

அவற்றின் மொத்த சக்தி – இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணுக்குண்டின் ஆற்றலைவிட 135,000 மடங்கு அதிகம்.

அணுவாயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குறித்து உலகளவில் கவலை எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button