உலகம்

இஸ்ரேலின் இறையாண்மையைத் திணிக்கும் மசோதா நிறைவேற்றம்

இஸ்ரேலிய பாராளுமன்றம் மேற்குக் கரையின் மீது இஸ்ரேலின் இறையாண்மையைத் திணிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதை அனுமதிக்கும் மசோதா இது என கூறப்படுகிறது.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் 120 உறுப்பினர்களில் 25 வாக்குகளால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, 24 பேர் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் பல உறுப்பினர்கள் வாக்களிப்பில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்குக் கரையில் உள்ள மாலே அடுமிமின் பெரிய குடியேற்றத்தை இணைப்பதற்கான மற்றொரு மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மசோதா சட்டமாக மாற, அது பாராளுமன்றத்தில் மூன்று முறை நிறைவேற்றப்பட்டு, பின்னர் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் உட்பட குழு அளவிலான விவாதங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதேவேளை மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைப்பதை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றத்தை கட்டார் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச சட்ட மீறல் என்று கடுமையாக கண்டித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *