உலகம்

ஈரானுக்கு எதிராக மீண்டும் பொருளாதார மற்றும் இராணுவத் தடை விதிப்பு?

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை மீண்டும் விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.

ஈரான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டி ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு பேரவைக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இராஜதந்திர தீர்வைக் காண ஈரானுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பணியாற்றிய பல தூதர்களை திரும்ப அழைக்கவும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“நாம் ஏன் இந்தப் பொறியில் சிக்கி, ஒவ்வொரு மாதமும் நம் கழுத்தில் ஒரு தடையை வைத்திருக்கிறோம்?”

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய சில நாட்களுக்குப் பிறகு, நியூயார்க்கிலிருந்து தெஹ்ரானுக்குப் புறப்பட்டபோது ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.

அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் தெஹ்ரானுக்கு இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாமிய குடியரசை அழிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

தடைகளை விதிக்கும் முடிவை ஆறு மாதங்களுக்கு தாமதப்படுத்துவதற்கான ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் 15 உறுப்பினர்களைக் கொண்ட பேரவை அதற்கு நான்கு வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தடைகள்  (28) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதிலிருந்து ஈரான் அதன் தடைசெய்யப்பட்ட அணுசக்தி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் அதன் பல அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐ.ஏ.இ.ஏ.வின் ஆய்வாளர்கள் அதன் அணுசக்தி நிலையங்களை அணுகுவதை ஈரான் தடை செய்துள்ளது.

புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியதை அடுத்து இந்த தடை முறைக்கு வரவுள்ளது.

இருப்பினும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் ஐக்கிய நாடுகள் சபையில் தனது நாடு ஒருபோதும் அணு குண்டுகளை உருவாக்க முயற்சிக்காது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button