அண்டார்டிகா எனும் அதிசயம் !

அண்டார்டிகா வெறும் உறைந்த நிலப்பரப்பு மட்டுமல்ல, அது பூமியின் மிகப்பெரிய நன்னீர் தேக்கமும் கூட. பூமியில் உள்ள மொத்த நன்னீரில் கிட்டத்தட்ட 60% அதன் பிரம்மாண்டமான பனிப்பாறைகளுக்குள் பூட்டப்பட்டுள்ளது. இந்த பனிப்பாறைகள் சில இடங்களில் 4 கிலோமீட்டருக்கும் அதிகமான தடிமன் கொண்டவை.
மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பனிப்பொழிவு குவிந்து, இறுக்கமடைந்ததால் இந்த பனிக்கட்டிகள் உருவாகியுள்ளன. இவை, உலக கடல் மட்டத்தையும், காலநிலை அமைப்புகளையும் ஒழுங்குபடுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் உறைந்த களஞ்சியமாக உள்ளன.
அண்டார்டிகாவில் உள்ள பனியின் அளவு மிக அதிகம் என்பதால், அதன் நிலைத்தன்மையில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் கூட மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த பனிப்பாறைகளின் குறிப்பிடத்தக்க பகுதிகள் உருகினால், உலக கடல் மட்டம் அபரிமிதமாக உயர்ந்து, உலகெங்கிலும் உள்ள கடலோர நகரங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், பனி அடுக்குககள் மற்றும் உறைந்த நிலப்பரப்புகள் கடந்த காலத்தின் காலநிலை பதிவாகவும், பூமியின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய குறியீடாகவும் செயல்படுவதால், விஞ்ஞானிகள் அதை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர். நமது கிரகத்தின் நன்னீர் சமநிலையைப் புரிந்துகொள்வதற்கும், பாதுகாப்பதற்கும் இது மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
![]()