பூமியில் மட்டும்தான் மேகங்கள் இருக்கிறதா?

ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள், உறைந்த பளிங்குத் துகள்கள் அல்லது வளிமண்டலத்தில் தொங்கும் துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியை மேகம் எனலாம். புவியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் உள்ளது போல வேறு கோள்களைச் சுற்றியும் மேகங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள நீர்த்துளிகள் மற்றும் படிகங்கள் நீர் அல்லது பல்வேறு வேதிப்பொருட்களால் ஆக்கப்பட்டிருக்கலாம். காற்று நிறைவுற்ற நிலையை அடைவதால் பூமியில் மேகங்கள் உருவாகின்றன.
காற்று அதன் பனி நிலைக்குக் குளிரும் போது அல்லது அடுத்துள்ள மூலத்திலிருந்து போதுமான அளவுக்கு ஈரப்பதத்தை நீராவி வடிவு பெறும் போது பனிநிலையின் வெப்பநிலை உயர்ந்து சூழல் வெப்பநிலையை அடைகிறது. இவற்றைப் பூமியின் அடிவளிமண்டலம், மீவளிமண்டலம், இடைவளிமண்டலம் உள்ளிட்ட ஓரியல் மண்டலத்தில் காணலாம்.
மேகங்களைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிவியல் மேக ஆய்வியல் எனப்படுகிறது. வானிலை ஆய்வியலின் ஒரு பிரிவான வானிலை, இயற்பியல் துறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் காணப்படும் துகள் கூட்டங்களையும் மேகங்கள் என அழைப்பதுண்டு.
புவியின் மேற்பரப்பிலுள்ள மேகங்களை குருள் மேகம் (Cirrus), உயர் வெண்நார் அடுக்கு மேகங்கள் (Cirrostratus), மென்முகில் (Cirrocumulus), திரள் கார்முகில் (Cumulonimbus), உயர்திரண்மேகம் (Altocumulus), உயர் படல முகில் (Altostratus), திரண்முகில் (Cumulus), அடுக்குத்திரண் மேகம் (Stratocumulus), கருமுகில் (Nimbostratus) என்று பல வகைகளாகப் பிரித்திருக்கின்றனர்.
சராசரியாக, ஒரு மேகம் 1 கி.மீ 3 கன அளவையும், தோராயமாக 1.003 கி.மீ 3 அடர்த்தியையும் கொண்டுள்ளது. இது சுற்றுப்புறக் காற்றின் அடர்த்தியை விட, சுமார் 0.4 சதவீதம் குறைவாகும். இந்தக் குறைக்கப்பட்ட அடர்த்தியே மேகத்தின் மிதப்புக்கு முக்கியக் காரணமாகும். இதன் விளைவாக, ஒரு குவி மேகத்தின் சராசரி எடை சுமார் 1 மில்லியன் டன்கள் ஆகும்.
மேக அடர்த்தி வெவ்வேறு மேக வகைகளுக்கு இடையில் கணிசமாக வேறுபடுகிறது. இதனால் அவற்றின் ஒட்டுமொத்த எடையில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
அடர்த்தி மற்றும் நீர் உள்ளடக்கத்தில் ஏற்படும் இந்த மாறுபாடுகள் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் உயரம் போன்ற வளிமண்டல நிலைமைகளால் பாதிக்கப்படுகின்றன. இது ஒடுக்கச் செயல்முறைகளைப் பாதிக்கிறது.
மில்லியன் கணக்கான பவுண்டுகள் தண்ணீரைக் கொண்டிருந்தாலும், மேகங்களின் எடை எண்ணற்ற சிறிய துளிகளில் பரவியிருப்பதால் அவை வளிமண்டலத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு துளியும், பொதுவாக இரண்டு மைக்ரான் விட்டம் கொண்டதாகவும், மனித முடியை விட (50 முதல் 70 மைக்ரான்) கணிசமாக மெல்லியதாகவும் இருக்கும். இது மிகவும் இலகுவானது. நுண்ணிய துகள்களைச் சுற்றியுள்ள ஒடுக்கச் செயல்முறைகள் மூலம் உருவாகும் இந்த துளிகள், பெரிய மழைத்துளிகளை உருவாக்கத் திரட்டுதல் தேவை என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
கூடுதலாக, மேகங்களின் மிதப்பு, வெப்பநிலை வேறுபாடுகளால் உருவாகும் உயரும் காற்று நீரோட்டங்களான மேல்நோக்கிய காற்று ஓட்டங்களால் பராமரிக்கப்படுகிறது. இந்த நீரோட்டங்கள் ஈர்ப்பு விசையை எதிர்த்து, நீர்த்துளிகளை உயரத்தில் வைத்திருக்கின்றன.
நமது கிரகமான பூமிக்கு மேலே உள்ள மேகங்கள் நீர் மூலக்கூறுகளால் ஆனவை. ஆனால், வீனஸ் கிரகத்திற்கு மேலே உள்ள மேகங்கள் சல்பர் டை ஆக்சைடாலும், செவ்வாய்க் கிரகத்திற்கு மேலே உள்ள மேகங்கள் பனி அல்லது திட நீராலும் ஆனவை. திட நீர் மேகங்கள் வாயு அல்லது நீர் மூலக்கூறுகளால் ஆனவற்றை விட நிச்சயமாகக் கனமாக இருக்கும்.
வியாழன் மற்றும் சனியின் மேகங்கள் அம்மோனியா, அம்மோனியம் ஹைட்ரோசல்பைடு மற்றும் அவற்றின் அடியில் உள்ள தண்ணீரின் அடுக்குகளால் ஆனவை. இவை நிச்சயமாக பூமிக்கு மேலே உள்ள மேகங்கள், வெள்ளி மற்றும் செவ்வாய் கிரகங்களை விடக் கனமாக இருக்கும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் மீத்தேன் வாயுவால் ஆன மேகங்களைக் கொண்டுள்ளன. இந்த மேகங்கள் வீனஸை விட இலகுவானவை. உண்மையில் வீனஸ் சூரிய மண்டலத்தில் கனமான மேகங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
![]()
இந்த அறிவியல் கட்டுரையைப் பிரசுரித்தமைக்காகஅக்கினிக்குஞ்சு இணையத்தளத்திற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
எனக்கு சிறுவயதிலிருந்தே கோள்களைப் பற்2றியும் பிரபஞ்சம் பற்றியும் அறிவதில் பெரும் ஆர்வமுடையவனாக இருந்து வருகிறேன்.அத்துடன் பூகற்பவியலிலும் ஆர்வமுண்டு.நான் ஒரு விஞ்ஞானக் கல்வி மாணவன்.
இந்தப் பிரபஞ்சத்தில் பலதரப்பட்ட கிரகங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் மிகப்பல உண்டு என முழுமையாக நம்புபவன்.அதிலும் பூமியில் வசாழும் மனிதர்களைப் போன்ற மனிதர்கள் வேறு கிரகங்களிலும் இருக்கிறார்கள் என்பதும் அவர்களும் பூமியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.
நான் படிக்கிற காலத்திலேயே சக மாணவர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டுமிரக்கிறேன்.இது சம்பந்தமான கட்டுரையொன்றை ஆரம்பத்தில் ஜேர்மனியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வெற்றிமணிப் பத்திரிகையில் எழுதி அதை அதில் தொடரமுடியாத சூழலில் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் கிரகப்போர் என்ற தொடராகத் தொடர்ந்து பகுதி 26 உடன் நிறுத்திய போதும் அக்கட்டுரை முற்றுப்பெறவில்லை.அதனைத் தொடரவேண்டும் என்ற எண்ணம் உண்டு.
அதனையொட்டி இப்பொழுது இந்த இணையத்தளத்தில் ஆகாயப்பந்தல் என்ற தொடர்கதையை எழுதி வருகிறேன்.அத்துடன் நடுகைக்காரி என்ற தொடரையம் இந்த இணையத்தளத்தில் எழுதி வருகிறேன்.பல்வேறுபட்ட கட்டுரைகளையும் எழுதி வருகிறேன்..எனது எழுத்தார்வத்துக்கு தனது இணையத்தளத்தில் களம் அமைத்துக் கொடுத்து வரும் நண்பர் திரு.சதா பாஸ்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அத்துடன் சிறந்த படைப்பாளியும் சிறந்த ஓவியருமான நண்பர் திரு.கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள் எனது படைப்புகளுக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து வருவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்.
இந்த அறிவியல் கட்டுரை கோள்கள் ,பிரபஞ்சம்ஐம்பூதங்கள் பற்றிய அறியாவலுக்கு பசி தீர்க்கும் உணவாகி யுள்ளது.
எமது ஒவ்வொரு நொடிப்பொழும் வேதியலாலும் இயற்பியலாலும் இயக்கப்படுவதும் இவையிரண்டும் ஐம்பூதங்களுக்குள் அடங்கும் என்பதை நாமறிவோம்.தொடர்ந்தும் அறிவியல் சார்ந்த படைப்புகளைப் பிரசுரியுங்கள்.
அன்புடனும் அனைவருக்கும் வாழ்த்துகளுடனும்
ஏலையா க.முருகதாசன் ,ஜேர்மனி