பலதும் பத்தும்

பூமிக்கு திரும்பவிருக்கும் மகிழ்ச்சியை விண்வெளி ஆய்வு கூடத்தில் விருந்து கொண்டாடிய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்து நாளை மறுதினம் 13ந் திகதி பூமிக்கு திரும்புகிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்சூ சுக்லா

இவர் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து நுண்ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்த ஆய்வு உட்பட பல ஆய்வுகளை முடித்துக் கொண்டு பூமி திரும்ப தயாராகின்றார்கள்

இவர் உட்பட நான்கு விண்வெளி வீரர்களும் பூமி திரும்ப தயாராகின்றார்கள்

இந்நிலையில் மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேரவிருக்கும் மகிழ்ச்சியை நேற்று விண்வெளி ஆய்வு கூடத்தில் வைத்து இந்திய உணவு விருந்து வைத்து பகிர்ந்து கொண்டுள்ளார்

இவர்கள் சென்ற “ஸ்பேஸ் எக்ஸ்” விண்கலம் மூலம் நாளை மறுதினம்

13ந் திகதி புறப்பட்டு 14 ந் திகதி பூமியை வந்து சேர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அமெரிக்க நாசா விண்வெளி ஆய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button