பலதும் பத்தும்

கணவருக்கு அதிகம் துரோகம் செய்யும் பெண்கள்

எமது சமூகத்தில் சில பெண்கள் திருமணம் செய்த பின்னரும் கணவர்களுக்கு துரோகம் செய்வார்கள்.

திருமணத்திற்கு பின்னர் நடக்கும் துரோகங்களால் நம்பிக்கையின்மை ஏற்பட்டு திருமண வாழ்க்கை முழுவதும் மோசமாகி விடும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது.

கணவன்-மனைவி இடையில் ஏற்படும் துரோகம் என்பது ஒருபோதும் பாலினத்தை சார்ந்தது இல்லை, ஏனெனில் ஆண், பெண் இருவருமே இப்படியான தவறுகளை செய்கிறார்கள்.

துரோகத்திற்கு எப்படி பாலினம் தடையில்லையோ, அதே போன்று நாடுகளிலும் தடையில்லை.

ஏனெனில் இந்த நாடு குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரம் நடக்காமல் அனைத்து நாடுகளில் நடக்கிறது.

அந்த வகையில், ஒரு நிறுவனமொன்று நடத்திய ஆய்வில் கணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிகம் பெண்கள் இருக்கும் நாடு எது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

நைஜீரியா – கணவர்களுக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகமாக நைஜீரியாவில் இருக்கிறார்கள். நைஜீரியாவில் உள்ள பெண்களில் 62% பேர் திருமணத்திற்கு பின்னர் இந்த தவறை செய்கிறார்கள். இதனால் விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன ஆய்வு கூறுகிறது.

தாய்லாந்து – தாய்லாந்தில் உள்ள பெண்களில் 59% பெண்கள் தவறான வழியில் செல்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளை விட தாய்லாந்தில் சமூக விதிகள் மிகவும் தளர்வானதாக உள்ளதால் இது போன்ற தவறுகள் நடக்கின்றன.

பிரிட்டன் – இந்த நாட்டில் உள்ள பெண்களில் சுமாராக 42% பெண்கள் துரோகம் மற்றும் திருமணம் மீறிய உறவில் இருக்கிறார்களாம்.

மலேசியா – மலேசியாவில் வாழும் பெண்களில் 33% பெண்கள் திருமணத்தை மதிக்காமல் தவறான வழியில் செல்கிறார்கள். இதனால் ஆண்கள் பல இன்னல்களுக்கு முகங் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா – வளர்ந்த நாடுகளில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் திருமணமான பெண்களில் 14% பேர் திருமண வாழ்க்கைக்கு துரோகம் இழைக்கிறார்கள். திருமணமான ஆண்களில் 54% பேர் தங்கள் துணையின் திருமணத்திற்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button