முச்சந்தி
ஐந்து முறை உயிர் தப்பிய புட்டின்: மாஸ்கோவில் வெடித்து சிதறிய கார்- புட்டினுக்கு வைக்கப்பட்ட குறியா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைப் பொறுத்த வரையில், குறைந்தது ஐந்து படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பியுள்ளார். கடந்த வாரம் நடந்த ஒரு முயற்சியைத் தவிர்த்து, இதுவரை புட்டின் மீது ஐந்து படுகொலை முயற்சிகள் நடந்துள்ளன)உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவராக ரஷ்ய அதிபர் புட்டின் இருக்கிறார். இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புட்டினின் பாதுகாப்பு அரணுக்கான ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. அந்த கார் ரஷ்ய உளவுப்படை அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டபோது திடீரென வெடித்துச் சிதறியிருக்கிறது.
புட்டின் மீது கொலை முயற்சி?
ரஷ்ய அதிபராக இருக்கும் புட்டின், உலகில் அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்ட தலைவர்களில் ஒருவர் ஆவார். அவரது உயிருக்குப் பல அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவரை பாதுகாக்க ரஷ்ய உளவுத்துறை (சீக்ரெட் சர்வீஸ்) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவர் ஒரு இடத்தற்குச் செல்வதற்குப் பல வாரங்களுக்கு முன்பே கூட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடுமாம். கடந்த வார இறுதியில் மார்ச் 29இல் புட்டினின் பாதுகாப்பு கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.ரஷ்யாவை சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மாஸ்கோ சாலைகளில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த கார் ரஷ்ய உளவுத்துறையான FSB தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. இந்த காரின் மதிப்பு $3,55,796 இருக்கும் என சொல்லப்படுகிறது. முதலில் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் தெரிகிறது.
இந்த கார் ரஷ்ய அதிபர் மாளிகையின் அதிபர் சொத்து மேலாண்மைத் துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென கார் வெடித்துச் சிதற என்ன காரணம்? கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
திடீரென வெடித்து சிதறிய கார் :
72 வயதான ரஷ்ய அதிபர் புட்டின் பெரும்பாலும் ரஷ்ய சொந்த நிறுவனமான ஆரஸ் கார்களையே அதிகம் பயன்படுத்துவார். மேலும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் புதின் ஆரஸ் கார்களையே பரிசாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் புட்டினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை கிளப்புவதாக இருக்கிறது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஷ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புட்டினின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த எந்தவொரு நாடு முயன்றாலும் அணு குண்டை வீசுவோம் என்று ரஷ்ய அதிபர் மாளிகை எச்சரித்து இருந்தது. மேலும், கடந்த காலங்களில் பல முறை புட்டின் மீது படுகொலை முயற்சிகள் நடந்துள்ளதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடனோவ் கூறியிருந்தார்.
சமீபத்தில் தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூட ரஷ்ய அதிபர் புட்டின் சீக்கிரம்
உயிரிழப்பார் என்று கூறியிருந்தார். அதாவது புட்டின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புட்டின் இறந்துவிட்டால் எல்லாமே ஓவர் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உயிரிழப்பார் என்று கூறியிருந்தார். அதாவது புட்டின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புட்டின் இறந்துவிட்டால் எல்லாமே ஓவர் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.பல முறை கொலை முயற்சி:
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வார இறுதியில் ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியதாக மாஸ்கோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இது ஒன்றும் முதல் முறை அல்ல. குறைந்தது ஐந்து முறை இதுபோல் கொலை முயற்சிகளில் இருந்து அவர் எந்த காயமும் இல்லாமல் தப்பியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மாஸ்கோவில் கொலை முயற்சியில் இருந்து தப்பியதாக மேற்குலக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
2022 ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை தாக்கியதில் இருந்து புட்டினின் உடல்நிலை குறித்தும், அவரது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்தும் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
அஜர்பைஜானில் கொலை முயற்சி:
2002-ஆம் ஆண்டு புட்டின் அஜர்பைஜான் சென்றிருந்தபோது, அவரைக் கொல்ல சதி செய்ய ஈராக்கியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஆப்கானிஸ்தான் மற்றும் செச்சென் (Chechen) கிளர்ச்சிப் படைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஈராக் குடிமகன் என அடையாளம் காணப்பட்டார்.
அவர் தனது திட்டத்தைச் செயல்படுத்தும் நேரத்தில், பாதுகாப்புப் படையினர் சதித்திட்டத்தைப் பற்றி அறிந்து அந்த நபரையும் அவரது கூட்டாளி ஒருவரையும் கைது செய்தனர். இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
2002ம் ஆண்டு நவம்பரில், புட்டினைக் கொல்லும் இன்னொரு திட்டம் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
உள்ளூர் தகவல்களின்படி, புடின் செல்லும் நெடுஞ்சாலையில் 40 கிலோ வெடிபொருட்கள் வெடிக்கக் காத்திருந்தன.
பழுது பார்ப்பவர்கள் போல் மாறுவேடமிட்டு வந்த சிலர் வெடிகுண்டை அங்கு வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு மணி நேரம் கழித்து, சாதனங்கள் மர்மமான முறையில் மறைந்து விட்டன மற்றும் புடினின் கார் திசைதிருப்பப்பட்டது.
இன்றுவரை, அதிகாரிகள் இந்த விஷயத்தை வெளிப்படுத்த மறுக்கிறார்கள் மற்றும் அது நடக்கவில்லை என்று கூட மறுக்கிறார்கள்.2003 பிரித்தானியாவில் கொலை முயற்சி :
அக்டோபர் 2003இல் புட்டினைக் கொல்லும் சதித்திட்டத்தை பிரித்தானிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை முறியடித்ததாகக் கூறப்படுகிறது.
கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு ஆண்கள் புட்டினைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் ரஷ்ய இரகசிய உளவுச் சேவை தாக்குதலாளி என்று கூறப்பட்டது.
விசாரணைகளின் படி, இந்த ஆண்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்குத் திரும்பியவர்கள் மற்றும் புட்டினை படுகொலை செய்ய ஒப்பந்த கொலையாளியால் பணியமர்த்தப்பட்டனர்.
ஆனால் பொலிஸார் பின்னர் 40 மற்றும் 36 வயதுடைய இருவரை விசாரணைக்குப் பிறகு விடுவித்தனர். மேலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் கூறப்பட்டது.
2012 செச்சென் சதித்திட்டம்:
2012-ஆம் ஆண்டில், ரஷ்ய சிறப்புப் படைகள் செச்சென் கிளர்ச்சியாளர் ஆடம் ஒஸ்மாயேவை கைது செய்தனர். அவர் பிரித்தானியாவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் உக்ரேனிய கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் பிடிபட்டார்.
அதே வேளை உக்ரைன் போர் ஆரம்பமாகியதன் பின்னர், 2022ம் ஆண்டு மே மாதம், உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறைத் தலைவர் கைரிலோ புடானோவ், ரஷ்ய-உக்ரைன் போரின் தொடக்கத்தில் புடினின் உயிருக்கு ஒரு “தோல்வியுற்ற முயற்சி” நடந்ததாகக் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்த தாக்குதலுக்கு யார் காரணம், எங்கு நடந்தது என்பதும் தெரியவில்லை.
![]()