பலதும் பத்தும்

தந்தை செல்வாவின் 127வது ஜெயந்தி தினம் இம்முறை கிளிநொச்சியில்!

தந்தை செல்வாவின் 127 வது ஜெயந்தி நிகழ்வு மிக சிறப்பான முறையில் கிளிநொச்சி கூட்டுவு மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தந்தை செல்வநாயகம் அறக்கட்டளையின் அறங்காவலர் இராசையா பேரின்பநாயகம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்

இந்நிகழ்வு எதிர்வரும் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிரதம அதிதியாக இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் ஆர் .நடராஜான்மற்றும் இந்திய துணைத் தூதர் யாழ்ப்பாணம் ஸ்ரீமான் சாய் முரளி மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேதிக அரச அதிபர் எஸ்.முரளிதரன், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button