பலதும் பத்தும்

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து, பிலிப்பைன்ஸ் பொலிஸார் அவரை கைது செய்துள்ளது.

ஹொங்காங்கிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான இருந்தபோது டுடெர்ட்டே மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

79 வயதான அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் முன்னதாக வெளியாகியிருந்த போது அது குறித்து பதலளிக்கையில், ​​சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி இந்த கைது நடவடிக்கையை “வரலாற்று தருணம்” என்று அழைத்தது.

எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையை டுடெர்ட்டேவின் முன்னாள் ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் சால்வடார் பனெலோ, கடுமையாக சாடியுள்ளார், ஏனெனில் பிலிப்பைன்ஸ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இருந்து விலகியுள்ளதாகவும் இது “சட்டவிரோதமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான போர்’

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றின் முன்னாள் மேயரான டுடெர்ட்டே, குற்றங்களுக்கு எதிராக பரவலான ஒடுக்குமுறையை உறுதிமொழியாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்.

கடுமையான வார்த்தைஜாலங்களுடன், போதைப்பொருள் சந்தேக நபர்களைச் சுட்டுக் கொல்ல பாதுகாப்புப் படைகளைத் திரட்டினார்.

பிரச்சாரத்தின் போது 6,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரால் அல்லது தெரியாத தாக்குதல் நடத்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஆனால் உரிமைக் குழுக்கள் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

“ஹிட்லர் மூன்று மில்லியன் யூதர்களைக் கொன்று குவித்தார். இப்போது [பிலிப்பைன்ஸில்] மூன்று மில்லியன் போதைக்கு அடிமையானவர்கள் உள்ளனர். அவர்களைக் கொன்று குவிப்பதில் நான் மகிழ்ச்சியடைவேன்,” என்று அவர் பதவியேற்ற சில மாதங்களில் கூறினார்.

ஆனால் அவரது “போதைப்பொருட்களுக்கு எதிரான போர்” பொலிஸ் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்தது என்றும், போதைப்பொருள் சந்தேக நபர்கள் பலர் உடனடியாக தூக்கிலிடப்பட்டனர் என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

எனினும், குற்றச்சாட்டுகளை டுடெர்ட்டே மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button