பலதும் பத்தும்

மாதவிடாய் நின்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம்?

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் இயற்கையான உயிரியல் நிகழ்வாகும். இந்த சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க உடல்நல விளைவுகளை, குறிப்பாக இதய நோய்களை உண்டாக்குவதாக கூறப்படுகின்றன.

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவதே ஆகும். ஏனென்றால் இது இதய பாதுகாப்பு விளைவைக் கொண்டுள்ளது.

பெண்கள் பெருந்தமனி தடிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற இதயப் பிரச்சனைகளுக்கு குறைவாகவே பாதிப்பிற்கு ஆளாவார்கள். மாதவிடாய் நின்ற பிறகு அல்லது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நிகழ்வுகள் பெண்களிடம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய இதய பிரச்சனைகளுக்கு மருந்துகள் தீர்வாக இருக்கின்றன. அவற்றில் ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) ஒன்றாகும். இது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிப்பதன் மூலம் அதன் இதய பாதுகாப்பு விளைவுகளை மீட்டெடுக்க உதவுகிறது. ஹார்மோன் மாற்று சிகிச்சையில் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் முடியும். இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இருப்பினும், இதன் நன்மைகள் இன்னும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளன.

ஹார்மோன் மாற்று சிகிச்சையை பயன்படுத்தும் போது சில பெண்களுக்கு ரத்த உறைவு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் மாற்று சிகிச்சைகளை மருந்து நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

உதாரணமாக, அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குணப்படுத்த பெரும்பாலும் ஸ்டாட்டின்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரக்கூடிய இதய நிகழ்வுகளைக் குறைப்பதில் நன்மைகள் இருப்பதற்கான சான்றுகளையும் இது வழங்கியுள்ளன. இப்போது, ​​மருந்துத் துறை மிகவும் பரந்த மக்கள்தொகையில், குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, ஸ்டாட்டின்ஸின் சாத்தியமான நன்மைகள் குறித்த ஆய்வில் கவனம் செலுத்து வருகிறது.

மாதவிடாய் நின்ற பெண்களிடையே மாரடைப்பு ஏற்படுவதைக் குறைப்பதற்கான தடுப்பு முறைகளில் மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. மருத்துவ சிகிச்சைக்கு அப்பால், வாழ்க்கை முறை மாற்றங்கள் மிக முக்கியமானவை. உடற்பயிற்சிகள், சரியான உணவை எடுத்துக்கொள்வது மற்றும் நோயாளிகள் தங்கள் மருந்துகளைப் முறையாக பின்பற்றுவது ஆகியவை அடங்கும். கூடுதலாக, மெனோபாஸ் சமயத்தில் வரக்கூடிய இதய ஆபத்துகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாதவிடாய் நிறுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தில் அதன் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இந்த அபாயங்களைக் குறைப்பதில் மருந்துத் துறையின் முக்கியத்துவம், உலகளவில் பெண்களுக்கு எதிர்காலத்தை ஆரோக்கியமானதாக மாற்றுவதில் இன்னும் முக்கியமானதாக மாறும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button