ஏபிசி நியூஸ் மீதான அவதூறு வழக்கில் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு ஏபிசி செய்தி சேவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட தீர்வின் ஒரு பகுதியாக இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஏபிசி நியூஸில் ஒளிபரப்பப்பட்ட அமெரிக்க பிரதிநிதி நான்சி மேஸ் உடனான நேர்காணலில், தொகுப்பாளர் ஜோர்ஜ் ஸ்டெபனோபொலோஸ், டொனால்ட் டிரம்ப் “கற்பழிப்புக்கு பொறுப்பு” என்று கூறினார்.

அவதூறான அறிக்கையை வெளியிட்டு ஒளிபரப்பியதற்காக ஜோர்ஜ் ஸ்டீபனோபௌலோஸ் மற்றும் ஏபிசி நியூஸ் மீது டொனால்ட் டிரம்ப் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

15 மில்லியன் டொலர்நஷ்டஈடுக்கு கூடுதலாக, ஏபிசி நியூஸ் மற்றும் ஸ்டெபனோபுலோஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் நான்சி மேஸுடன் நடத்தப்பட்ட தொடர்புடைய நேர்காணல் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையை வெளியிட ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், 15 மில்லியன் டொலர் இழப்பீட்டுத் தொகையை ட்ரம்பிற்கான “அதிபர் அறக்கட்டளை மற்றும் அருங்காட்சியகத்திற்கு” அர்ப்பணிக்கப்பட்ட நிதிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒளிபரப்பாளர் ஒரு மில்லியன் டொலர்களை சட்டத்தரணி கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button