முச்சந்தி

நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்பம்சம்: சுகத் வசந்த டி சில்வாவின் உரை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி சமூகத்தினருக்கான கொடுப்பனவு 7500 ரூபாவிலிருந்து 10000 ரூபாவாக நிச்சயம் அதிகரிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த சில்வா தெரிவித்தார்.

மேலும் அவரது நாடாளுமன்ற உரையில்,

“இது எனது கன்னி உரை. மேலும், இது ஒரு வரலாற்றுக் கதை. இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் 76 ஆண்டுகளுக்குப் பிறகு, மாற்றுத்திறனாளி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர். இது தற்செயலாக அல்லது ஏதோவொரு காரணத்தால் வழங்கப்பட்ட ஆணை அல்ல. இதற்கு பின்னால் ஒரு குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். 17 இலட்சத்துக்கும் அதிகமான எனது மாற்றுத்திறனாளி சமூகத்தின் சார்பாக அந்தக் குழுவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

குறித்த சமூகத்திற்கு முடிவுகளை எடுப்பதற்கு பிரதிநிதி ஒருவர் தேவை என்பதை தேசிய மக்கள் சக்தி மட்டுமே புரிந்து கொண்டது.

மாற்றுத்திறனாளி என்பவர் இந்த உலகத்திற்கு அழகைக் கொண்டு வந்த தூதுவர். உங்களிடையே கண்ணுக்குத் தெரியாத நான் என்பதால் இங்கு பன்முகத்தன்மை எழுந்துள்ளது.

பன்முகத்தன்மையே சிறப்பை உருவாக்குகிறது.

நான் உங்களிடையே பார்வையற்றவன் என்பதால், இங்கு பன்முகத்தன்மை எழுந்துள்ளது. அந்தச் சிறப்பினால்தான் மனித சமுதாயத்தின் சிறப்பே உருவானது.

இந்த இயலாமை நாம் பலவந்தமாக பெற்றதல்ல “ என்றும் சுகத் வசந்த தெரிவித்தார்.

எமது நாட்டின் மக்கள் தொகையில் 2 மில்லியனானோர் விசேட தேவையுடையவர்களாக உள்ளனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 9 வீதமான இந்த பிரிவினர் சார்பில் வரலாற்றில் முதல்தடவையாக நாடாளுமன்றத்திற்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button