கவிதைகள்

அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே!… கவிதை… ஜெயராமசர்மா

நீள் செல்வம் நிலபுலங்கள் வேண்டாம்
மாடி மனை கோடிசெல்வம் வேண்டாம்
ஆழ் மனதில் அமைதிவர எனக்கு
அருள் தருவாய் இலக்குமித் தாயே

வையத்துள் வறுமை இன்றி வாழ
மற்றவர்க்கு மனம் விரும்பி ஈய
பொய் இல்லா வழியினிலே உழைக்க
உய்யும் வழி காட்டிடுவாய் தாயே

இல்லை என்று சொல்லாமல் இருந்து
இல் அறத்தை நல்லறமாய் ஆக்க
நல்ல பாதை காட்டிடுவாய் தாயே
நா நிலத்தில் துணையாவாய் நீயே

அளவற்ற ஆசை எனக் கில்லை
அளவான பொருள் இருந்தால் போதும்
நிலையற்ற தங்கம் வைரம் வேண்டாம்
நினதருளே எனக் கிருந்தால் போதும்

செல்லும் செல்வம் வேண்டாம் தாயே
செல்லா அருளைத் தந்திடு தாயே
அல்லும் பகலும் உந்தன் நினைப்பே
அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே

 

 

 

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *