பூஜையறையில் இந்த பொருட்களை வையுங்கள்; செல்வம் வீடு தேடி வரும்
பொதுவாக பூஜை அறையில் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் விஷயங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
அப்படி செய்வதினால் முழு குடும்பத்திற்கும் நல்லது.
இன்று பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று சக்தி வாய்ந்த ஆடி வெள்ளி: ஏன் சிறப்பு வாய்ந்தது தெரியுமா?

மணி
பொதுவாக நாம் வீட்டில் பூஜை செய்யும் போது மணி அடித்துக் கொண்டே பூஜையை செய்வது நல்லது. இது ஒரு ஆன்மீக சூழலை உருவாக்குகிறது. மணியின் ஒலி சத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
கங்கை நீர்
நதியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீருக்கு கங்கை நீர் என்று பெயர். இது வீட்டை சுத்தப்படுத்தி, எதிர்மறை ஆற்றல்களை நடுநிலையாக்குகிறது. செல்வத்தை ஈர்க்கிறது. பூஜை அறையைச் சுற்றி தினமும் கங்கை நீரை தெளிப்பது வீட்டிற்கு நல்லது.
விளக்கு
வீட்டில் தினமும் பூஜை அறையில் காலை மற்றும் மாலை என 2 வேலைகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும்.
விளக்கு என்பது ஒளி, பிரகாசம் மற்றும் அறிவின் சின்னம். இது ஆன்மீக உணர்வை மேம்படுத்துகிறது.
சாம்பிராணி
வீட்டில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளி கிழமையும் சாம்பிராணி போட்டு ததூபம், அகர் பட்டிகள், ஆகியவற்றை பூஜை மண்டபத்தில் ஏற்றினால், அதிலிருந்து வரும் புகை காற்றை சுத்தப்படுத்துகிறது. அவை நறுமணத்தை வெளியிடுகின்றன. இந்த வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.
சாமியின் சிலைகள்
உங்களுக்கு பிடித்த சாமியின் சிலைகளை பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது. அதனால் அந்த இடமே புனிதமாகிறது. ஒவ்வொரு நாளும் சிலைகள் மற்றும் தெய்வங்களின் படங்களை வணங்கி அருள் பெறுங்கள். இப்படிச் செய்தால் வீடு மங்களகரமாக இருக்கும்.
மலர்கள்
பூஜை அறையில் தினமும் புதிய மலர்களால் பூஜிக்க வேண்டும். அவை நல்ல நறுமணத்தை வெளியிடுகின்றன மற்றும் தூய்மையை மேம்படுத்துகின்றன.
இதன் விளைவாக, வீட்டில் உள்ள சூழ்நிலை மகிழ்ச்சியாகவும் செல்வ செழிப்பாகவும் இருக்கும். அது மட்டும் இன்றி செல்வம் நம்மை தேடி வரும்.
![]()