பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நிகழ்ந்த சோகங்கள்

சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் தொடர்ந்து 7ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய பதக்க பட்டியலில் சீனா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

அந்தவகையில், 11 தங்கம், 7 வெள்ளி , 6வெண்கலம் அடங்களாக மொத்தம் 24 பதகக்ங்களை பெற்று முதலிடத்திலும் 9 தங்கம் 15 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 37 பதக்கங்களை பெற்று ஐக்கிய அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் 8 தங்கம், 11 வெள்ளி , 8 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 27 பதக்கங்களை வென்று ப்ரான்ஸ் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றது.

தொடர்ந்து அவுஸ்திரேலியா, ஜப்பான் பிரித்தானியா ஆகியன தொடர்ந்து அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

ஒலிம்பிக்குக்கு குட்பாய் சொன்ன பெர்சி அரீனா

ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தனது ஆறாவது பதக்கத்துடன் பிரபல ஜிம்னாஸ்டி்க் வீராங்கனை பெர்சி அரீனா, விடைபெற்றார்.

இவரது சாதனைகள் எண்ணிலடங்காதவை. இவர் போட்டிகளில் கலந்து கொள்வதை அறிந்தாலே சக போட்டியாளர்கள் சற்று பயவுணர்வுடனேயே போட்டியிடுவார்களாம். அந்த அளவுக்கு அவர் திறமைமிக்கவர்.

காரணம், 27 வயதில், பைல்ஸ் பிரேசிலின் ரெபேகா ஆண்ட்ரேடை 1.199 புள்ளிகள் வித்தியாசத்தில் முறியடித்து, 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸில் மிகவும் விரும்பப்படும் தனிநபர் பட்டத்தை வென்ற மூத்த தடகள வீராங்கனை ஆனார். இவர் 39 உலக மற்றும் ஒலிம்பிக் பதக்கங்களுக்கு சொந்தக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சிக்குள்ளாக்கிய பி.வி. சிந்துவின் தோல்வி

நேற்று மாலை சிறந்த ஷட்லர்கள் நாக் அவுட் செய்யப்பட்டதால், இந்தியாவுக்கு பேட்மிண்டன் ஒலிம்பிக்கில் விளையாட்டுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்தது.

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, ரி16 மோதலில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவிடம் தோற்றது அன்றைய மிகப்பெரிய தோல்வி.

அன்றைய தினம் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர், அதே நேரத்தில் ஹெச்எஸ் பிரணாய் சக இந்தியரான லக்ஷ்யா சென்னிடம் தோல்வியடைந்தது, இது இந்தியாவிற்கு மூன்றாவது அடியாக இருந்தது. தொடரட தோல்வியால் இந்தியாவின் ரசிகர்கள் தற்போது ஏமாற்றத்தில் காணப்படுகின்றனர்.

விலகிய வீராங்கனை

ஒலிம்பிக் போட்டியின் போது கேள்விப்பட்ட கதைகளில் அனைவரின் கவனமும் தற்போது இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை ஏஞ்சலா கரினியின் பக்கம் திரும்பியுள்ளது.

அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃப்பிற்கு எதிரான தனது ஒலிம்பிக் போட்டியை 46 வினாடிகளுக்குப் பிறகு “நான் என் உயிரைக் காப்பாற்ற வேண்டும்” என்று கூறி கரினி கைவிட்டார்.

இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம் கடந்த ஆண்டு மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெறத் தவறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவராக இருந்த கலிஃப், பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் குத்துச்சண்டையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட இரண்டு வீராங்கனைகளில் ஒருவர்.

அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் இத்தாலியின் ஏஞ்சலா கரினி ஆகியோருக்கு இடையிலான போட்டி ஆரம்பமானதும் எதிர்பாராதவிதமாக கெலிஃப் அடித்ததால் கரினி போட்டியை கைவிட்டார்.

இமானே கெலிஃப் ஒரு திருநங்கை எனவும் முன்னர் விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *