ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை: வெளியானது தமிழரசு கட்சியின் தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button